பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி: தரமான சம்பவம் காத்திருக்கு

பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி: தரமான சம்பவம் காத்திருக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி அரசியலில் பெரியளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். சோனியா, ராகுல் பங்கேற்கும் அரசியல் பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே பிரியங்கா காந்தி தலைகாட்டி வந்தார். ஆனால், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்து வந்தனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் தோல்வி முகத்தை சந்தித்து வந்த காரணத்தால், பிரியங்காவை களமிறக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டது. மேலும், பிரியங்காவால் மட்டுமே சரிவில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீட்க முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.
 
‘அயர்ன் லேடி ஆஃப் இந்தியா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் இந்திரா காந்தி. சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் இந்திரா காந்தி முக்கியமானவர். தனது பாட்டி இந்திரா காந்தியை போன்றே, தலைமுடி அலங்காரம், உடை உடுத்தும், பேசும் பாணியை கொண்டிருக்கும் பிரியங்கா, இந்திராவை போன்று எளிதாக மக்களுடன் கலந்து நிற்கும் திறன் கொண்டவர்.
 
இரும்புப் பெண்மணி இந்திராவின் முகத்தில் ஒரு உறுதிப்பாடு தெரியும். ஆனால், மக்களுடன் கலந்துவிட்டால் அவர் அன்பானவராக மாறிவிடுவார். எனவே, அவர் மீது மக்களுக்குப் பிரியம் இருந்தது. அதுபோல தான் பிரியங்காவும். இது அவருக்கான ப்ளஸாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரமாஸ்திரமாக, நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் பிரியங்கா காந்தி.
 
இதனிடையே, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பிரியங்கா காந்தியை அம்மாநிலத்தின் பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அவரும் அங்கு தீவிரமாக பணியாற்றி வந்தார்.
 
உத்தரப்பிரதேச தேர்தல் என்றாலே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும். கடந்த முறை தேர்தலின் போது இதே எதிர்பார்ப்பு நிலவியது. அக்கட்சிக்கு தேர்தல் உத்தியாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோரும் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், பிரியங்கா காந்தி பிரசாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். அதேபோல், இந்த முறையும் தேர்தல் பிரசாரத்தோடு நிறுத்திக் கொண்டார் பிரியங்கா காந்தி.
 
இருப்பினும், உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top