அதிக நோட்டா ஓட்டு; உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

அதிக நோட்டா ஓட்டு; உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

பா.ஜ.,வைச் சேர்ந்த, வழக்கறிஞர், அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், பொதுநலன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:தங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது போல், பிடிக்காதவர்களை நிராகரிக்கும் உரிமையும் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். தற்போது அனைத்து கட்சிகளுமே, மக்களின் விருப்பத்தைக் கேட்டு வேட்பாளரைத் தேர்வு செய்வதில்லை.

ஒரு தொகுதியில், வேட்பாளர்களைவிட, நோட்டாவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்குள் அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும். நோட்டா மூலம் மக்கள் நிராகரித்த வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது. இதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசின் சட்ட அமைச்சகம், தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top