சிங்கத்தின் வேட்டை தொடரும் - இயக்குனர் ஹரி!

சிங்கத்தின் வேட்டை தொடரும் - இயக்குனர் ஹரி!

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்’, `சிங்கம் 2′ படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3′ படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா – அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்துள்ளது.

`சி3′ படம் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரிக்கு, நடிகர் சூர்யா டொயோடா ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார். இந்நிலையில், இயக்குநர் ஹரி அளித்த பேட்டியில் சூர்யாவுடன் இணைந்து `சிங்கம்’ படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க உள்ளதாக கூறினார். சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

ஹரி அடுத்ததாக விக்ரமை இயக்க உள்ளார். `சாமி’ படத்தின் அடுத்த பாகமாக `சாமி 2′ படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சிங்கம் படத்தைப் போன்று வேறொரு கதைக்களத்தில் சூர்யாவுடன் இணையவுள்ள ஹரி, அதன்பின்னர் `சி4′ படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top