பா.ஜ., பிரசார கூட்டங்களுக்கு கட்டுப்பாடு!
Posted on 20/04/2021
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. இதனால், இம்மாநில தேர்தல் பிராசாரம் குறித்து, பா.ஜ., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா பரவல் அதிகரிப்பதால், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பெரிய பேரணிகள் எதுவும், பா.ஜ., சார்பில் நடத்தப்படாது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட, கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்கள், திறந்த வெளியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன், 500 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும்.
கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் பிரசாரம், 'ஆன்லைன்' வாயிலாக 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.