அவுரங்காபாத்தில் சனி, ஞாயிறு முழு அடைப்பு!
Posted on 13/03/2021
மராட்டியம் மாநில கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 57,755 ஆக அதிகரித்து உள்ளது. 5,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தின் அவுரங்காபாத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் முழு அடைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது.