ஸ்ரீவி. கலசலிங்கம் பி.எட் கல்லூரி 12வது பேட்ச் வகுப்பு துவக்கவிழா!
Posted on 04/08/2017
ஸ்ரீவி. கலசலிங்கம் பி.எட் கல்லூரியில் 12-வது பேட்ச் முதலாண்டு துவக்க விழா இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஆர் அனந்தகிருஷ்ணவேணி கல்லூரி பேராசிரியர்களை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நேர்காணல் பற்றி விளக்கமளித்தார். பேராசிரியை எம். சுகுமாரி வரவேற்புரை வழங்கினார். கணித பேராசிரியர் முனைவர் கே. ஜெயப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ஒரு பணியில் தகுதியானவர் ஆகுவதற்கு உண்டான பயிற்சிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். ஆசிரியர் என்பது தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அப்போதைய அறிவை தெரிந்துகொண்டு மாணவர்களிடம் கற்பிக்கமுடியும் என்று கூறினார்.
மேலும், கற்பிப்பதில் புது யுக்தியைப்புகுத்தி புன்னகை முகத்துடன் கோபம், தாழ்மனப்பான்மை, இல்லாது மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால்தான் நல்ஆசிரியர் ஆகமுடியும். என்று கூறினார். கலசலிங்கம் பல்கலை துணைப்பதிவாளர் முனைவர் பி. ஜி. குருசாமிப்பபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியை எஸ். சிவகாமி சுந்தரி கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றி பேசினார். முதலாண்டு மாணவர்கள் பெற்றோர்களுடன் திரளாகக்கலந்துகொண்டனர். பேராசிரியை எஸ். கஸ்தூரி நன்றி கூறினார்.
Tags: News, Academy, Education