மெர்சலில் மௌனம் களைத்த விஜய்!
Posted on 25/10/2017
மெர்சல் படத்திற்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.
மேலும், மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்". என்று விஜய் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த நோட்டீஸில் விஜய்யின் கையெழுத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.