இந்தியாவின் தடுப்பூசிக்கு கனடாவில் நன்றி பலகை!
Posted on 11/03/2021
ஆஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு வாக்சின் கனடாவுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அடுத்த அனுப்பீடாக 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 5 லட்சம் டோஸ்களை கனடாவுக்கு இந்தியா அண்மையில் அனுப்பியது.
ஆஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு வாக்சின் கனடாவுக்கு அனுப்பப்பட்டது . இதற்கு அடுத்த அனுப்பீடாக 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமரிடம் இந்த மாதத் தொடக்கத்தில் பேசினார். அப்போது கனடாவின் கொரோனா பிரச்சினைகளில் வாக்சின் மூலம் இந்தியா பங்கெடுத்து தீர்த்து வைக்கும் என்றார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியுவும் பிரதமர் மோடியைப் பாராட்டும் போது, “உலகமே கோவிட்19-ஐ வெல்ல வேண்டுமெனில் அதற்கு இந்தியாவின் தடுப்பூசிப் பங்களிப்பு பெரிய அளவில் உதவுகிறது. ஏனெனில் இந்தியாவின் மருந்து உற்பத்தித் திறன் அப்படி. பிரதமர் மோடி அந்த உற்பத்தித் திறனை உலகுடன் பகிர்ந்து கொள்கிறார்” என்று பெரிய அளவில் புகழ்ந்து பேசினார்.
ஆனால் கனடா இன்னும் ஒரு படி மேலே போய் கிரேட்டர் டொராண்டோவில் பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகமான, “நன்றி! இந்தியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. கனடாவுக்கு கோவிட் 19 வாக்சின் அனுப்பியதற்கு நன்றி, லாங் லிவ் கனடா, இந்தியா உறவுகள்” என்று வாசகத்துடன் பெரிய பில்போர்டு ஒன்றை வைத்துள்ளது.