ஃபைசர் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை!

ஃபைசர் கொரோனா தடுப்பூசி:  அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை!

அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடெர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுபோக, இந்தியா உள்பட ஏராளமான நாடுகள் கோடிக்கணக்கான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. இங்கிலாந்து நேற்று முதல் பொதுமக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை போடத் தொடங்கிவிட்டது. இந்தியாவில், ஃபைசர் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்காக மத்திய அரசு குளிர் சேமிப்பு வசதிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
 
இந்நிலையில், கோவிட்-19 தடுப்பூசியை வழங்குவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்குவதற்காக, தேவைப்பட்டால் ராணுவ தயாரிப்பு சட்டத்தை (Defence Production Act) பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top