மாலியில் தீவிரவாத தாக்குதல்!
Posted on 23/03/2021
நைஜரின் அண்டை நாடான மாலியில் எல்லைப் பகுதியினை ஒட்டியுள்ள தஹுவா மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் பொது மக்கள் மீது சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை மாகாண செய்தித்தொடர்பாளர் அப்துல் ரமான் சகாரியா உறுதிப்படுத்தியுள்ளார்.