வெடிகுண்டு தாக்குதலில் மாலத்தீவின் அவைத்தலைவர் காயம்!
Posted on 07/05/2021
மாலத்தீவில் 30 ஆண்டுகால சா்வாதிகார ஆட்சிக்குப் பின்னா் மக்களால் தோந்தெடுக்கப்பட்ட முதல் அதிபா் முகமது நஷீத். கடந்த 2008 முதல் 2012 வரை அதிபராகப் பணியாற்றிய இவர், தற்போது மாலத்தீவு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் முகமது நஷீத், தலைநகா் மாலேயில் உள்ள தனது வீட்டிற்கு அருகே வியாழக்கிழமை(நேற்று) நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தாா். தாக்குதல் நடந்த போது முகமது நஷீத் தனது காரில் ஏறுவதற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது முகமது நஷீத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்தில் சேதமடைந்த ஒரு மோட்டாா் சைக்கிள் கிடக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இந்த சம்பவம் ஒரு கொலை முயற்சியா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.