எல்லை மோதலில் 45 சீன வீரர்கள் பலியானது உண்மை!
Posted on 12/02/2021
லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த சீனா, இப்போது வரை, இந்திய பதிலடியில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனமான, 'டாஸ்' தெரிவித்துள்ளதாவது: லடாக்கில், சீனா - இந்தியா இடையே நடந்த மோதலில், 45க்கும் அதிகமான சீன வீரர்களும், 20 இந்திய வீரர்களும் இறந்தனர். தங்களின், 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை, இந்தியா உடனடியாக தெரிவித்தது. ஆனால், இந்த விவகாரத்தில், தங்கள் இழப்பை மூடி மறைக்க சீனா முயற்சிக்கிறது. லடாக் தாக்குதலில், சீனாவுக்கு தான், இழப்பு அதிகம்.
ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் செய்தி ஏஜென்சியின் இந்தத் தகவல் அப்போது வெளிவந்த பிற வெளிநாட்டுத் தகவல்களுடன் ஒத்துப் போவதாக உள்ளது.