கொரோனாவால் ஆஸ்திரேலியர்கள் சிக்கி தவிப்பு!
Posted on 12/12/2020
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனித குலத்தையே முடக்கிப்போட்டுள்ளது. பல நாடுகளில் சர்வதேச விமான சேவை முடங்கி உள்ளது. இதனால், தாய்நாட்டை விட்டுச்சென்றவர்கள் ஏராளமானோர் பிற நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.
அந்த வகையில் 39 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.
செப்டம்பர் 18-ந் தேதி வரையில், 45 ஆயிரத்து 950 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பி இருப்பதாகவும் அவர் கூறினார்.