வேதா நிலையம் திறப்பு!
Posted on 28/01/2021
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி அவரது இல்லம் அமைந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் அரசு சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.ஜெ. வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவரது வீடு முழுதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
அவர் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உட்பட அனைத்து புகைப்படங்கள்; அவர் பயன்படுத்திய பொருட்கள் பூஜை பொருட்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதனை தொடர்ந்து, ஜெ. நினைவு இல்லத்தை இன்று(ஜன.,28) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர், முதல்வரும், சபாநாயகர், அமைச்சர்கள் அனைவரும் அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.