தமிழகம் வருகிறது தேர்தல் ஆணையக்குழு!
Posted on 17/12/2020
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் சென்னையில் ஆலோசிக்க உள்ளனர். டிசம்பர் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். டிசம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேச உள்ளனர்.