அநாகரிகப் பேச்சால் உதயநிதிக்கு எதிர்ப்பு!
Posted on 08/01/2021
சசிகலாவை அநாகரிகமாக பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகையர் குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கடந்த, 5ம் தேதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உதயநிதி பங்கேற்றார். அப்போது, சசிகலாவை அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசினார். அவரது பேச்சுக்கு, மகளிர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
உதயநிதியின் அருவருக்கத்தக்க பேச்சால், ஒரு மனிதர் கல்லறையில் துடித்துக் கொண்டிருப்பார். பெண்களை இழிவுபடுத்தும் உதயநிதியின் பேச்சு, கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு, மகளிர் கூறியுள்ளனர்.