பெட்ரோல், டீசல் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!
Posted on 09/04/2021
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.