தமிழகத்தில் மார்ச் 18ம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!
Posted on 15/03/2022
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் விடுமுறை நாளுக்கு பதிலாக மார்ச் 26ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News