பொங்கல் பண்டிகைக்கு அரசுப் பேருந்துகள்!
Posted on 11/12/2020
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
அரசு விரைவுப்பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் இன்று முதல் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி ஜனவரி 12ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்தில் பயணிப்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.