தமிழக பட்ஜெட் கூட்டத் தொரில் ஆளுநர் உரை!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொரில் ஆளுநர் உரை!

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது.

கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும் கூட தமிழகத்துக்கு ரூ.60,674 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2000 சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பது தொலைநோக்குத் திட்டமாக அமைந்துள்ளது. 
 
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 435 மாணவர்களுக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மேலும் சமூக நீதி மற்றும் சம நீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகைளைப் பெறலாம்.
 
முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
 
சட்டப்பேரவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கும், எந்த வகையிலான சவால்களை எதிர்கொள்ளவும் தமிழக காவல்துறை தயாராக உள்ளது.
 
நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலம் தமிழகம்தான். பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய தமிழக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top