செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

நார்வேயில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கால்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களின் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்திய செஸ் கிரண்ட்மாஸ்டர் ஆவர். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற இவர் கடைசியாக மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்து தனது சாம்பியன்ஷிப் பட்டத்தை இழந்தார். பின்பு மேக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியனாக இருந்து வந்தார். இவர் நார்வே செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவார். 2011ம் ஆண்டு உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பெற்றார்.
 
இந்நிலையில் நார்வேயில் நடைபெற்று வந்த ப்லிஸ்ட் செஸ் சாம்பியன் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த ஆட்டத்தில் ஏழாவது தொடரில் உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் எதிர்த்து விஸ்வநாதன் ஆனந்த் விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்றார்.
 
இந்த தோல்வியால் மேக்னஸ் கார்ல்சன் இரண்டாவது இடத்திற்கு சென்றார். ஐந்தாவது சுற்றில் அனீஸ் கிரியுடனும், ஒன்பதாவது சுற்றில் பிரான்ஸ் மாக்சிம் லிச்சியர் லாக்ரேனுடனும் தோல்வியடைந்ததால் விஸ்வநாதன் ஆனந்த் 5 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். அமெரிக்க கிரண்ட்மாஸ்டர் வெஸ்லி 6.5 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், நெதர்லாந்து கிரண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
 
கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். அதன்பின் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு மாதத்தில் கார்ல்சன் மூன்று முறை இந்தியர்களால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top