ஐசிசியின் டாப்-3 வீரர்களல் ரிஷப் பண்ட்
Posted on 03/02/2021
ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருதுக்கான ‘டாப்–3’ வீரர்கள் பரிந்துரை பட்டியலில் ரிஷப் பண்ட் இடம் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2021 முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது தரப்பட உள்ளன. இதன் படி கடந்த ஜனவரி, 2021-ல் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது.
இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் இடம் பெற்றனர். இதில் ரிஷாப் பன்ட், ஆஸ்திரேலிய தொடரில் சிட்னி டெஸ்டில் 97 ரன் எடுத்து ‘டிரா’ செய்ய உதவினார். பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.