ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு 4 தமிழக வீரர்கள் தேர்வு!
Posted on 09/04/2021
இந்தியாவிலிருந்து பாய்மர படகுப்போட்டிக்கு நான்கு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். நான்கு வீரர்களும் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். மகளிர் பிரிவில் சென்னையை சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன், மகளிர் ஒற்றையர் லேசர் ரேடியல் பிரிவில் களமிறங்குகிறார்.
ஒலிம்பிக் வரலாற்றில் நேத்ரா குமணன் இந்தியாவிலிருந்து தகுதி பெறும் முதல் வீராங்கனை என்ற சாதனைபடைத்துள்ளார். வருண் மற்றும் கணபதி இருவரும் இணைந்து 49-வது பிரிவில் களமிறங்குகின்றனர்.
வேலூரைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் மும்பையிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.