படப்பிடிப்பில் தீ விபத்து - ஒருவர் பலி!
Posted on 30/07/2022
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். இவர் தற்போது நடிகை ஷ்ரத்தா கபூருடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் தீடீரென தீ விபத்து எற்பட்டுள்ளது.
இதன்பின், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரவு 10.30 மணி அளவில் தீயை அணைத்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளார். தீ விபத்தின் காரணாமாக படப்பிடிப்பு முழுவதும் கருகிபோகிவிட்டது. அங்கிருந்து எடுக்கபட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Tags: News