மீண்டும் கிடைக்குமா ஆஸ்கர்? ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரை
Posted on 14/12/2016
தமிழ் நாட்டில் மிகச் சிறந்த இசைப் புயலாக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ம் ஆண்டு ஹிந்தியில், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியான ”ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றார். இந்நிலையில் அவரின் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். "பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீராரான பீலேவின் வாழ்க்கை வரலாற்று படமான ”பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட்டு” என்ற படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆங்கில மொழியில் உருவாகியுள்ள இந்த படம் இந்த வருடம் மே 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த படத்தில் வரும் ”ஜிங்கா” என்ற பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசைப்பிரிவிலும் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் இருக்கும் டால்பி தியேட்டர் மற்றும் ஹைலேண்ட் சென்டரில் நடைபெறவிருக்கிறது.
Tags: News