ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்

நாட்டில் இதுவரை ஆந்திரா, அரியானா, கோவா உள்பட 9 மாநிலங்களில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு’ திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இதன்படி அடையாளப்படுத்தப்பட்ட ஒரு துறை பொது வினியோகத்துறை ஆகும். இந்த துறைக்கு, கூடுதல் கடன் சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாட்டில் இதுவரை ஆந்திரா, அரியானா, கோவா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 9 மாநிலங்கள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன. இதற்காக இந்த மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.25,523 கோடி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்த துறையின் மந்திரி நிர்மலா சீதாராமனும் டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top