இந்தோனேசிய ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!
Posted on 22/01/2021
ராணுவம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவுடன் தொலைபேசியில் வியாழக்கிழமை கலந்துரையாடியதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து சுட்டுரையில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாவது:
இந்தோனேசிய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோ இன்று என்னுடன் தொலைபேசியில் பேசினாா். அப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்களை மேற்கொண்டோம். இது பலனளிக்கும் வகையில் இருந்தது. இந்தோனேசியாவுடனான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.