கதையின் நாயகனாகும் நடிகர் செந்தில்

கதையின் நாயகனாகும் நடிகர் செந்தில்

தமிழ் திரை உலகின் மூத்த கொமடி நடிகர்களில் ஒருவரான நடிகர் செந்தில், பெயரிடப்படாத படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் செந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பட தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தெரிவித்திருக்கிறார்.
 
படத்தை பற்றி இயக்குனர் சுரேஷ் சங்கையா பேசுகையில்' ஆயுள் தண்டனை பெற்று சிறையில் கைதியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய வாழ்நாளில்தான் பிறந்த கிராமத்தில் குறிப்பிட்ட நாள் வசிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார். அவர் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மக்களுக்கு சேவை செய்து விட்டு மீண்டும் சிறைக்கு திரும்புகிறார். இந்த பின்னணியில் அழுத்தமான கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் செந்திலிடம் பேசினோம். அவர் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவருக்கு இந்தப் படத்தில் ஜோடி கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தேதி அன்று தமிழக நகரான அருப்புக்கோட்டையில் தொடங்குகிறது.' என்றார். இப்படத்திற்கு ஆர் வி சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிக்கும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனிடையே இயக்குனர் சுரேஷ் சங்கையா, நடிகர் பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சத்திய சோதனை' என்ற படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top