பிரதமரின் சென்னை வருகை!

பிரதமரின் சென்னை வருகை!

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், வரும், 14ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

வரும், 14ம் தேதி, புதிய திட்டப் பணிகளை துவக்கி வைக்க, பிரதமர் மோடி, தமிழகம் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் சேவை; இந்தியன் ஆயில் நிறுவனத்தின், துாத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை, பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.
 
முதல்வர் இ.பி.எஸ்., 2020 டிசம்பர், 18ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். அத்துடன், தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், தமிழகம் வரும்படி, பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்; பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.
 
மேலும், கல்லணை புனரமைப்பு திட்டம், பவானி ஆறு நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கும், பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக,தகவல் வெளியாகி உள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top