இந்திய அமைச்சர் கருத்துக்கு சீனா வரவேற்பு!

இந்திய அமைச்சர் கருத்துக்கு சீனா வரவேற்பு!

இந்திய - சீன உறவு தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு, சீன வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு அளித்துள்ளது. சீன உறவுகள் தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த, 'ஆன்லைன்' கருத்தரங்கில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையே நெருக்கடியான நிலையை மாற்ற, சில வழிமுறைகளை சுட்டிக்காட்டினார். எல்லை பிரச்னையில் இரு நாடுகளும் தவறான வழிகளை பின்பற்றினால், அது, அவர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையே பாதிக்கும் என்றார்.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தை, நாங்கள் பாராட்டுகி றோம். அதே நேரத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த உறவுகளை, எல்லை பிரச்னை பாதிக்காது என, நம்புகிறோம்.இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளை முறையாக தீர்ப்பது, ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உறவுகளை சரியான பாதையில் எடுத்துச் செல்வது ஆகியவற்றில், இந்தியா, எங்களுடன் இணைந்து செயல்படும் என, உறுதியாக நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top