பாகிஸ்தான் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொலை
Posted on 17/12/2020
பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில், பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை கண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
அவர்களிடமிருந்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் பணி நடந்து வருவதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.