அர்ணாப்பின் முன்ஜாமீன் மனு திரும்பப்பெறப்பட்டது!
Posted on 18/12/2020
மஹாராஷ்டிராவில் அன்வய் நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளரும் அவரது தாயும் 2018ல் தற்கொலை செய்தனர். அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக 'ரிபப்ளிக் டிவி' சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது பெண் போலீசார் மீது அர்னாபும் அவரது குடும்பத்தினரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் இதில் முன் ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் அர்னாப் முறையிட்டார். இந்நிலையில் அந்த முன் ஜாமின் மனுவை அர்னாப் கோஸ்வாமி நேற்று திரும்பப் பெற்றார்.