CUET தேர்வு மாநில உரிமைகளை பறிக்காது
Posted on 25/04/2022
பொது நுழைவுத் தேர்வு, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், அதை மேம்படுத்தும் பணி மத்திய அரசுக்கும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர தனியாக பயிற்சி எடுப்பதையும், கூடுதல் செலவையும் பொது நுழைவுத்தேர்வு தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
CUET தேர்வுக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், CUET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். தனியார் பயிற்சி முறைக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமே பொது நுழைவுத்தேர்வு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
Tags: News