பா.ஜ.க-வை எச்சரித்த மம்தா!

பா.ஜ.க-வை எச்சரித்த மம்தா!

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகமாக நடத்தப்படுகின்றன.

1971-ம் ஆண்டின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநில சட்டமன்றங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன.
 
இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது, "உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளுக்கு கடந்த முறை இருந்ததை விட இந்த முறை அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
 
நாடு முழுவதும் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி கூட பாஜகவிற்கு இல்லாததால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எளிதாக பாஜக வெற்றி பெற்று விடமுடியாது. எனவே ஆட்டம் இன்னும் முடியவில்லை.
 
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை விட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்." என்று பேசினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top