திரைப்படங்களில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வேண்டும் -ஐஸ்வர்யா தத்தா!
Posted on 09/12/2018
திரைப்படம் ஒன்றில் கதாநாயகனுக்கு மட்டும் அல்ல கதாநாயகிக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த ‘பிக் பாஸ் -2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா இதனால் திரைப்படத்தின் கதைகளை தெரிவு செய்வதில் கவனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர் “ராஜமித்ரன் இயக்கத்தில் நடிகர் ஆரியுடன் காதல் கதையுள்ள ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றேன். இரண்டு காதலர்களுக்கு இடையே இடம்பெறும் மோதல்கள், பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்தப் படம். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அமைத்துள்ளார்.அதனால் தான் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகினேன். மஹத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்தப் படத்தை காமெடி கலந்த காதல் கதையில் உருவாக்கியிருக்கார் இயக்குநர் பிரபு ராம். இந்த இரண்டு படங்களும் என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான படங்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “திரைப்படத்தின் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனுக்கு மட்டும் அல்ல கநதாநாயகிக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தெரிவு செய்து நடிக்கிறேன்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பபட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல தளமாக அமைந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்துகொண்டவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் இதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தா, தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.