இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி!
Posted on 21/12/2020
இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் ஜனவரியின் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியளார்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், முதியோர் உள்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம், ஃபைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் மேற்பட்டோரில் 95 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.