மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள அழகி!
Posted on 04/09/2017
எதார்த்தமான நடிப்பு, குறும்புத்தனம் மற்றும் முக பாவனைகளால் ஒரே படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நஸீம்.
இவர் அறிமுகமான 'நேரம்' திரைப்படம் இவருக்கு மட்டுமின்றி நிவின்பாலிக்கும் திருப்புமுனையாக அமைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், மற்றும் 'திருமணம் எனும் நிக்ஹா' ஆகிய படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.
ஆனால் திடீர் என மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்து, பட வாய்ப்புகளை முற்றிலுமாக தவிர்த்தார். பல நாட்கள் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருந்த நஸ்ரியா தற்போது மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடிகர் ப்ரிதிவிராஜுடன் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அத்தோடு துல்கர் சல்மான் நடிப்பில், மலையாளம் மற்றும் தமிழில் உருவாகும் திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்க வரும் நஸ்ரியாவிற்கு பலர் தொடர்ந்து வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Tags: News, Hero