பெட்ரோல் விலை ரூ.3.38 உயர்வு: டீசல் விலையும் அதிகரிப்பு

பெட்ரோல் விலை ரூ.3.38 உயர்வு: டீசல் விலையும் அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, புதிய விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அறிவித்தன.

இந்த விலை உயர்வையடுத்து, தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.47-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.52.94-க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.02-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.54.43-ஆக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த 15 நாள்களில் கச்சா எண்ணெயின் விலை 13 சதவீதம் வரை அதிகரித்திருப்பதால், இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2 மாதங்களில், பெட்ரோல், டீசல் விலை 4 முறை குறைக்கப்பட்டது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.1-ம், டீசலின் விலை ரூ.2-ம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top