பெட்ரோல் டீசல் விலை உயர்வு!
Posted on 16/12/2016
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச கிடைக்கபெறும் கச்சா எண்ணை விலையின் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில்ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. நவம்பர் மாதம் 30 ம் தேதி சுமார் 47.25 டாலர் என்ற அளவில் விற்பனையான ஒரு பேரல் கச்சா எண்ணை தற்போது அதிகபட்சமாக 55.56 டாலர் வரை விற்பனையாகிறது.
இதனால் கச்சா எண்ணை உயர்வை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21 அதிகரித்தும், டீசலின் விலை லிட்டருக்கு 1.79 விலை அதிகரிப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
இந்த விலைப்பட்டியல் இன்று நள்ளிரவுக்கு முதல் அமலுக்கு வரவுள்ளது
Tags: News