உலக அழகியின் புதிய வீடு...!
Posted on 17/12/2016
பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் உலகின் மிக உயர்ந்த நகரங்களில் ஒன்றாகிய துபாயில் வீடுகள் மற்றும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் துபாயின் ஜுமேராஹ் கோல்ப் எஸ்டேட்டில் உள்ள சாங்க்டுயுவரி ஃபால்ஸ் அருகே மிகப்பெரிய மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளனர் ஐஸ்வர்யாராய் -அபிஷேக் பச்சன் தம்பதியினர்.
அது மட்டுமல்லாமல் துபாயில் பல பாலிவுட் முன்னணி நடிகர்கள் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் சல்மான்கான், சோஹாலிகான், அக்சயகுமார், கேத்ரினா கைப் மற்றும் பலர் துபாயில் பல வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கியுள்ளனர்.
பல வசதிகளை செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் - அபிசேக் பச்சன் வீட்டில் உள்ள அறைகளில் குறைந்த அளவில் மதிப்புமிக்கப் பர்னிச்சர்கள் மற்றும் லெதர் சோபா ஆகியவை உள்ளது. கிச்சனை பொருத்த வரை ஸ்காவோலினி டிசைனில் அட்வான்ஸ் சிஸ்டம் கொண்ட பொருட்கள் வைத்து உலகத்தரத்தில் கிட்சன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆடம்பரமான மாஸ்டர் பெட்ரூம் டார்க் கலரின் இண்டீரியர் டெக்கரேஷன் மற்றும் உயர்தர மரத்தால் செய்யப்பட்ட தரைதளம், ஆகியவை ஆடம்பரமான மாஸ்டர் பெட்ரூமை அழகுபடுத்தி உள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் இரவு நேரத்தில் இந்த விட்டில் இருந்து பார்த்தால் துபாயின் முழு அழகையும், வண்ண வண்ண விளக்குகளையும் ரசிக்கலாம். துபாயில் உள்ள மிகச்சிறந்த வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Star