ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 71வது சுதந்திரதின விழா!
Posted on 15/08/2017
ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 71வது சுதந்திரதின விழா துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கலசலிங்கம் பல்கலை துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் கொடியேற்றி வைத்தார். பல்கலைக்கழக என் சி சி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். துணை வேந்தர் பாரதநாட்டு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். என் சி சி மாணவர்கள் 8 பேருக்கு பதவி உயர்வு பேட்ஜ்களை துணை வேந்தர் அணிவித்து வாழ்த்தினார்.
பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், ஆடிட்டர் இளமாறன், வேந்தர் ஐ டி ஐ, பாலிடெக்னிக், பார்மஸி, பி. எட், ஆசிரியர் பயிற்சி, கலை, கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பரிசோதனைக்கூட டெக்னீசியன்கள், பராமரிப்புத்துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்துகொண்டனர். சுதந்திர தின விழா ஏற்பாடுகளை அலங்காராக்காட்சிக்கூடம் அமைத்து மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பொன்மொழிகளை எழுதி விளையாட்டுத்துறை பேராசிரியர்கள் விஜயலட்சுமி, வளாக பராமரிப்பு அதிகாரி பரமசிவம், வளாக பாதுகாவலர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தார்கள்.
கொடிவணக்கப்பாடலுடன் துவங்கிய விழா நாட்டுப்பண்ணுடன் முடிவடைந்தது.
Tags: News, Lifestyle, Art and Culture