ஸ்ரீவி. லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை!!
Posted on 23/11/2016
தேசிய கராத்தே போட்டிகளில் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் !
உலக கராத்தே தலைமைக்கழகம் சார்பாக தேசிய அளவிலான கராத்தே போட்டி சென்னையில் ஜே.ஜே. உள்விளையாட்டு அரங்கத்தில் ரத்தினம், பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. போட்டியில் 5 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் 420 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் லிங்கா குளொபல் பள்ளியின் மாணவா;கள் கலந்து கொண்டு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் பரிசுகளை வென்றனர்.
9 வயது தனித்திறன் பிரிவில் நான்காம் வகுப்பு மாணவர் கௌதம் சங்கர் முதல் இடம்பிடித்து தங்கப்பதக்கத்தையும் 10 வயது தனித்திறன் மற்றும் சண்டைப்பிhpவில் 5ம் வகுப்பு மாணவர் ஜெய்கணேஷ் இரண்டாம் இடத்தைப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், 13 வயது தனித்திறன் பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் ஹரிராம் மூன்றாம் இடத்தைப்பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
பயிற்சியாளர் செபஸ்டியன் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி போட்டிக்கு அழைத்துசென்றார்.
போட்டியில் பரிசு பெற்ற மணாவர்களை கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இயக்குநர்கள், முனைவர் எஸ். சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், பள்ளி முதல்வர் அல்கா சர்மா ஆகியோர் பாராட்டினார்.
Tags: News, Lifestyle, Art and Culture, Academy, Education