பிரிட்டனின் தடுப்பூசி நிறுத்தி வைப்பு!
Posted on 09/02/2021
தென் ஆப்பிரிக்காவில் அஸ்ட்ரா ஸெனகாவின் தடுப்பூசி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜுவெலி மெக்கிஸ் தெரிவித்தாா்.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் -அஸ்ட்ரா ஸெனகா உருவாக்கிய தடுப்பூசியை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தென்ஆப்பிரிக்காவுக்கு வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக பத்து லட்சம் பேருக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அஸ்ட்ரா ஸெனகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதன் செயல் திறன் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து தென்ஆப்பிரிக்கா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.