வராதீங்க... வராதீங்க... வேண்டுகோள் விடுக்கும் சிம்பு!
Posted on 15/06/2017
சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்துள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் வரும் 23ம் தேதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் சிம்பு கூறியிருப்பதாவது:
என்னை ட்ரோல் செய்பவர்கள் தான் எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். அவர்கள் எதிர்க்க எதிர்க்கத்தான் நான் வளர்ச்சி அடைகிறேன். எனவே எனது ஹேட்டர்கள் என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஹேட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து ஹேட்டர்கள் எனது படத்தை பார்க்க முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டருக்கு வரவேண்டாம். அங்கு எனது ரசிகர்கள் குஷியோடு கொண்டாடி வருவதை நீங்கள் பார்க்க நேரிட்டால் வேதனைப்படுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
Tags: News, Hero, Star