வட கொரியா அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுக்கு மறுப்பு!
Posted on 19/03/2021
தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சோ சான்-ஹுயி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா அழைத்தால், அதனை ஏற்க மாட்டோம்.
வட கொரியாவுக்கு விரோதமான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தாதவரை அதனுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட மாட்டோம்.
காலத்தை விரயமாக்கும் தந்திர உத்தியாக அமெரிக்கா விடுக்கும் அழைப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்கத் தேவையில்லை என்றாா் அவா்.