நேர்காணல், விவாத நிகழ்ச்சி குறித்து லாரன்ஸின் விளக்கம்!
Posted on 26/01/2017
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி, இணையதள, பண்பலை நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ் சமுதாயம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. வயது, ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் அந்த வெற்றியை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
சில பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணையதளம்,பண்பலை மற்றும் ஊடக நண்பர்கள் அந்த வெற்றி சம்மந்தமாக பேட்டி, நேர்காணல், விவாத நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். இந்த வெற்றி முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ந்தது. தயவு செய்து மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழையுங்கள். அவர்களோடு நானும் ஒருவனாகக் கலந்து கொள்கிறேன். என்னை மட்டும் அழைப்பது நியாயமாக இருக்காது என்பதை நான் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags: News, Lifestyle, Art and Culture