நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி அலுவலர்!

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி அலுவலர்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யாலால் என்ற இந்திய வம்சாவளி பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பவ்யாலாலை நியமித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் பல்வேறு உயர் பதவிகளை இந்திய வம்சாவளியினர் வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற பவ்யாலால், நாசா ஊழியர்களின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் சிறந்த பயிற்சி மிக்கவரான பவ்யாலாலை செயல் தலைவராக நியமித்து நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா துணை அதிபராக ஜோ பைடன் இருந்த போது பவ்யாலால் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், பவ்யாலால் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் கொள்கை சமூகத்தின் செயலில் உறுப்பினராக உள்ளார்.  தலைமை, இணைத் தலைவர் அல்லது ஐந்து உயர் தாக்கமுள்ள தேசிய அறிவியல் அகாடமி குழுக்களில் பணியாற்றினார். வணிக ரீதியான தொலைநிலை உணர்தலுக்கான தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக கூட்டாட்சி ஆலோசனை  குழுவில் தொடர்ச்சியாக 2 முறை பணியாற்றினார்.
 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top