பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இருவர் பலி!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இருவர் பலி!

பிலிப்பைன்ஸில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டன. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலநடுக்கத்தில் சில கட்டடங்கள் சேதமாகியுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நில அதிர்வின் மையம் அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகரத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 11 கி.மீ.தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த 1990ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top