துருவப் பிரதேசத்திலும் கொரோனா தொற்று!
Posted on 23/12/2020
அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் ராணுவ முகாம் வைத்துள்ள பிற நாடுகள் இதுவரை கொரோனா வைரஸ் குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்டார்டிகா சென்ற கடற்படைக் கப்பலில் இருக்கும் வீரர்களுக்கு தொற்றியுள்ளதாக சிலி ராணுவத் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.