சின்ஜியாங் மாகாணத்தில் நில அதிர்வு!
Posted on 25/03/2021
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் மார்ச் - 24-ம் தேதி புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வில் மூவர் பலியாகினர்.
இதுதொடர்பாக மண்டல அவசர மேலாண்மைத் துறையினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அக்சு பகுதி அமைந்துள்ளது. இங்கு புதன் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் சுமார் 65 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும் அபாய பகுதிகளில் உள்ள 278 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.